யாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(24) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ்.குடாநாட்டின் உரும்பிராய்ப் பிரதேசம், வளலாய் வடக்கு, அக்கரை, அஞ்சலிபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.