3 வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்ற தாய், ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ரயில் சாரதி..

ஆசிரியர் - Editor I
3 வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்ற தாய், ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ரயில் சாரதி..

அவிசாவளை ஹிகுரல மற்றும் மிரிஸ்வத்த ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற இளம் தாயையும் மூன்று வயது மகளையும் ரயில் சாரதி காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளம் தாயொருவர் தனது மூன்று வயது மகளுடன் களனி ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளனர்.

இதன்போது, அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலின் சாரதி தண்டவாளத்தில் இருந்த இளம் தாயையும் மகளையும் அவதானித்துள்ளார்.

இதனை அடுத்து ரயிலின் சாரதி, வேகக் கட்டுப்பாட்டின் கீழ் பயணித்த ரயிலை உடனே நிறுத்தி இளம் தாயையும் மகளையும் காப்பாற்றியுள்ளார்.

இதன்போது, இளம் தாயும் மகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 119 என்ற அம்பியூலன்ஸ் சேவை மூலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு