தம்பியின் தாக்குதலுக்கு இலக்காகிய அண்ணனின் நிலை!: யாழில் சம்பவம்

ஆசிரியர் - Admin
தம்பியின் தாக்குதலுக்கு இலக்காகிய அண்ணனின் நிலை!: யாழில் சம்பவம்

தம்பியின் தாக்குதலுக்குள்ளாகிய அண்ணன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று(22)இரவு யாழ்.தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அண்ணன்- தம்பி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த தம்பி கண்ணாடிப் போத்தலால் தனது அண்ணனின் முதுகுப் பகுதியில் கண்ணாடிப் போத்தலால் சரமாரியாகக் குற்றியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த அண்ணன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு