யாழ்.நெடுந்தீவு - கச்சதீவு பகுதிகளில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை எதிர்த்து போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு - கச்சதீவு பகுதிகளில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை எதிர்த்து போராட்டம்!

யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தொிவித்தும் இன்று நண்பகல் நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் நெடுந்தீவு மக்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தொிவித்திருக்கின்றனர். நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, 

அதன் வரலாற்றை திரிபுபடுத்துவதுடன், புதிதாக விகாரையை அங்கு கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றது. இதேபோல் கச்சதீவில் அதன் மத அடையாளத்தை மாற்றும் வகையில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே அரச மரங்களும் நாட்டப்பட்டிருக்கின்றது. 

இவற்றை கண்டித்தே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், பொதுமக்களும் இணைந்து வெடியரசன் கோட்டையினை பார்வையிட்டதுடன், அங்கு சிறிது நேரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணையும் நடத்தியிருக்கின்றனர். 

இன்றைய போராட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளில் இருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பதற்றமான நிலையினை பொலிஸார் ஏற்படுத்தியதுடன், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு