யாழ்.மாதகல் - மாரீசன்கூடல் கடற்கரையில் கடற்படை அதிரடி! பெருமளவு போதைப் பொருள் மீட்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகல் - மாரீசன்கூடல் கடற்கரையில் கடற்படை அதிரடி! பெருமளவு போதைப் பொருள் மீட்பு...

யாழ்.மாதகல் - மாரீசன்கூடல் பகுதியில் நேற்றிரவு கடற்படையினர் நடத்திய அதிரடி சுற்றிவளைப்பில் 150 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருந்து கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைத்திருத்த சமயமே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. 

மாதகல் கடறகரையில் இருந்த பற்றைக்குள் மறைக்கப்பட்ட நிலையில் இருந்து மீடகப்பட்ட இக் கஞ்சாவினைத தொடர்ந்து 

அருகில் மறைத்து வைத்திருந்த ஓர் படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.  கைப்பற்றப்பட்ட கஞ்சா தற்போது சட்ட நடவடிக்கைக்காக 

காங்கேசனதுறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு