யாழ்.நாவலர் மண்டபம் மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவலர் மண்டபம் மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்!

யாழ்.மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்டிருந்த நாவலர் கலாச்சார மண்டபத்தை வடமாகாண ஆளுநர் மத்திய அரசாங்கத்திம் கையளித்தமைக்கு எதிர்ப்பு தொிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.ஆளுநர் என்ற எழும்புத்துண்டுக்காக தமிழினத்தை விற்காதே, ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு