வெடுக்குநாறிமலை சிவாலயம் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ்.பல்கலைகழகம் முன் போராட்டம்!

ஆசிரியர் - Editor I

வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் இன்று திங்கட்கிழமை மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் இருந்த விக்கிரகங்கள் மற்றும் சூலங்கள் பிடுங்கி வீசப்பட்டமை பேரினவாத சக்திகளின் மதக் குரோதத்தை எடுத்துக்காட்டுகிறது என சுட்டிக்காட்டினர். 

மேலும் இதன்போது மாணவர்கள் ஐ.எம்.எவ் இடம் பிச்சை எடுத்து தொடர்வது இன அழிப்பா? மண் துறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா? வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து? எமது நிலம் எமது உரிமை என பதாதைகளை தாங்கியவாறு 

கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு