வடமாகாணத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை! வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களை அனுமதிக்க முடியாது - ஆளுநர் ஜீவன்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை! வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களை அனுமதிக்க முடியாது - ஆளுநர் ஜீவன்..

ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வடமாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வடமாகாணத்தில் முன்னுரிமை வழங்கப்படும். என கூறியிருக்கும் ஆளுநர் வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களை அனுமதிக்க முடியாது என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வடமாகாணசபையின் கீழ் உள்ள சிற்றுாழியர் வெற்றிடங்களுக்கு வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களை நியமிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

வடமாகாணத்தில் உள்ள அரச வேலை வாய்ப்புகளில் வடமாகாண இளையோருக்கே முன்னுரிமை வழங்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் அரச உயர் மட்டங்கில் முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. ஆகவே வடமாகாணத்திலுள்ள அரச வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு, 

வெளி மாகாணங்களைச் சார்ந்தவர்களை அனுமதிக்க முடியாது. மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு