சகோதரியின் சங்கிலியை திருடி அடகுவைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய சகோதரன் கைது!

ஆசிரியர் - Editor I
சகோதரியின் சங்கிலியை திருடி அடகுவைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய சகோதரன் கைது!

சகோதரியின் சங்கிலியை திருடி அடகுவைத்து அந்த பணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி வாங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

போதைப் பொருளுக்கு அடிமையாகி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து குறித்த நபர், 

விடுதலை செய்யப்பட்ட பின் சகோதரியின் வீட்டில் இருந்த ஐந்து பவுண் நகையினை திருடி அடைவு வைத்து மோட்டார் சைக்கிள் கைத்தொலைபேசி வாங்கியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் 

நேற்றைய தினம் பூம்புகார் பகுதியில் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்,

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு