யாழ்.உடுப்பிட்டியில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுப்பிட்டியில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!

யாழ்.உடுப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கியதால் காரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளான். 

சம்பவத்தில் உயிரிழந்தவர் 27 வயதுடைய நிலக்காடு காரைநகரை சேர்ந்த குமாரசாமி சுதன் எனும் ஒரு குழந்தையின் தந்தையாவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு