யாழ்.சாவகச்சோியில் டிப்பர் - கப் வாகனங்கள் மோதி கோர விபத்து! டிப்பர் சாரதி தப்பி ஓட்டம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் டிப்பர் - கப் வாகனங்கள் மோதி கோர விபத்து! டிப்பர் சாரதி தப்பி ஓட்டம்...

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் கப் வாகனமும் சாவகச்சோி - அரசடி பகுதியில் மோதி விபத்தக்குள்ளாகியுள்ளன. 

டிப்பர் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளிளோடு மோதுவதை தவிர்ப்பதற்காக எதிர் திசையில் திடீரென திருப்பிய பொழுது 

முன்னால் வந்த கப்ரக வாகனத்தோடு பலமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கப்வாகனம் முற்றாகச் செய்தமடைந்தது.

இவ் விபத்தை அடுத்து டிப்பர் சாரதி டிப்பர்வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளார். விபத்தில் கப்சாரதிக்கு தெய்வாதீனமாக எந்த காயங்களும் ஏற்படவில்லை. 

விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு