யாழ்.காரைநகரில் பொலிஸ் உத்தியோகஸ்த்தருக்கு வெளிநாட்டு சிகரெட் விற்க முயற்சியாம்! வர்த்தகர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் பொலிஸ் உத்தியோகஸ்த்தருக்கு வெளிநாட்டு சிகரெட் விற்க முயற்சியாம்! வர்த்தகர் கைது...

யாழ்.காரைநகர் ஊரி பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு வெளிநாட்டு சிகரட்டை விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

காரைநகர் ஊரி பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிகரெட் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட சிகரெட் வெளிநாட்டு சிகரெட் என இனங்காணப்பட்ட நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தை சோதனையிட்டபோது அங்கிருந்து மூன்று பெட்டி வெளிநாட்டு சிகரெட் கைப்பற்றப்பட்டது.

சம்பவத்தை தொடர்ந்து ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு