யாழ்.தெல்லிப்பழையில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை! 3 சந்தேகநபர்கள் கைது....

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை! 3 சந்தேகநபர்கள் கைது....

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் வீடு ஒன்றினுள் நுழைந்து கத்தி முனையில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விசேட குற்ற தடுப்பு பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

கடந்த 6ம் திகதி இரவு வயோதிபர்கள் தனித்திருந்த வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் பணமாகியவற்றைக் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை விசேட குற்ற தடுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்படி அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுடை மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறியுள்ள பொலிஸார் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு