யாழ்.சுன்னாகத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மைதானத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மத நிகழ்வு சிவசேனை தலையீட்டால் நிறுத்தம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மைதானத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மத நிகழ்வு சிவசேனை தலையீட்டால் நிறுத்தம்!

யாழ்.சுன்னாகம் - மயிலங்காட்டுப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மைதானத்தில் இடம்பெறவிருந்த மதமாற்ற செயற்பாடு சிவசேனை அமைப்பின் முறைப்பாட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மத அமைப்பு ஒன்றினால் மயிலங்காடு பகுதி உள்ள அரச பாடசாலை ஒன்றின் மைதானத்தில் மத நிகழ்வு ஒன்று ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த நிகழ்வு ஒரு திட்டமிட்ட மதமாற்றச் செயற்பாடு என சிவசேனை அமைப்பினர் சுன்னாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், மத மாற்ற செயல்பாடுகளுக்காக வருகை தந்தவர்கள் 

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்த நிலையில் அவ்வாறு சுற்றுலா விசாவில் வருகை தந்து மதமாற்ற செயற்பாடுகளை செய்ய முடியாது எனவும் தெரிவித்தனர். இந் நிலையில் பொலிசாரின் தலையீட்டினால்

பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு