வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமியை அழைத்துச் சென்ற நபர் கைது! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமியை அழைத்துச் சென்ற நபர் கைது! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்..

யாழ்.அச்சுவேலியில் 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற குறித்த சிறுமியின் உறவுமுறையான நபர் பொலிஸாரினால் நேற்று நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தந்தையை இழந்த குறித்த சிறுமி தாயின் அரவணைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி உறவு முறையான நபர் ஒருவருடன் சென்ற நிலையில் 

தாயின் முறைப்பாட்டை அடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் குறித்த நபர் தான் சிறுமியை அழைத்துச் செல்லவில்லை எனவும் வீதியில் நின்ற சிறுமி தன்னுடன் வந்ததாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுமையை வைத்தியப் பரிசோதனைக்காக அச்சுவேவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 

அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு