யாழ்.அச்சுவேலியில்15 வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருக்கி கூட்டு பாலியல் பலாத்காரம்! கண்டுகொள்ளாத பொலிஸார், மனித உரிமை ஆணைக்குழு தலையீடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில்15 வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருக்கி கூட்டு பாலியல் பலாத்காரம்! கண்டுகொள்ளாத பொலிஸார், மனித உரிமை ஆணைக்குழு தலையீடு..

மதுபானத்தை பருக்கி 15 வயதான சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அச்சுவேலி - தென்மூலை கிராமத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுசாராயம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளனர்.

எனினும் நேற்று இரவு 8 மணிவரை சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையிலோ அல்லது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலோ அனுமதிக்கவில்லை. 

இந்நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 

சிறுமியை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் முற்படுத்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு