யாழ்.அராலி சந்தியில் பேருந்தும் - பட்டா வாகனமும் மோதி கோர விபத்து! பட்டா சாரதி சம்பவ இடத்திலேயே பலி...

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலி சந்தியில் பேருந்தும் - பட்டா வாகனமும் மோதி கோர விபத்து! பட்டா சாரதி சம்பவ இடத்திலேயே பலி...

யாழ்.அராலி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்றுறை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நோக்கி சென்ற பட்டா வாகனம் குறிகாட்டுவானிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பட்டா வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார்.

இந்நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும்  ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு