யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த 5 பேர் கைது! வாள் செய்து கொடுத்தவரும் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த 5 பேர் கைது! வாள் செய்து கொடுத்தவரும் கைது...

யாழ்.மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த வயதான இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த இருவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின்போது சுடலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்  பொலிசாரால் மீட்கப்பட்டிருந்த நிலையில்,

மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள கம்மாலை ஒன்றில் வாளினை தயாரித்த  அதன் உரிமையாளரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளினை கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை கம்மாலை உரிமையாளருக்கு உதவி புரிந்த இளைஞர் ஒருவரையும் வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் இட்ட ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேரையும் பொலிசார் கைது செய்ததோடு வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு