யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் திருவள்ளுவர் சிலை, திறந்துவைக்கப்பட்டது...

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் திருவள்ளுவர் சிலை, திறந்துவைக்கப்பட்டது...

யாழ்.பிரதம தபாலகத்திற்கு முன்பாக பண்ணை சுற்றுவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

ரில்கோ சிற்றி ஹொட்டல் நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட இந்தச் சுற்றுவட்டத்தின் திருவள்ளுவர் சிலையை சொஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறுதிருமுருகன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், ரில்கோ சிற்றி ஹொட்டல் உரிமையாளர் தி.திலகராஜ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், 

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், யாழ்.மாநகர பதில் முதல்வர் து.ஈசன் , 

யாழ்.மாநகரசபை முன்னாள் முதல்வர்களான வி.மணிவண்ணன், இ.ஆனோலட், யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர், மாநகர சபை உறுப்பினர்கள், 

பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு