யாழ்.காரைநகரில் கோவில் திருவிழாவை சாதகமாக பயன்படுத்தி கொள்ளை முயற்சி! 5 பேரை மடக்கிப் பிடித்து நையப்புடைத்த மக்கள்...

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் கோவில் திருவிழாவை சாதகமாக பயன்படுத்தி கொள்ளை முயற்சி! 5 பேரை மடக்கிப் பிடித்து நையப்புடைத்த மக்கள்...

யாழ்.காரைநகர் - கோவளம் பகுதியில் நேற்று மாலை வீட்டு நிலைகளை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள் நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

சுழிபுரம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த ஐவர் அடங்கிய இளைஞர் குழு ஒன்று  காரைநகர் கோவளபகுதியில் உள்ள வீடுகளில் உள்ள வீட்டு நிலைகளை திருடிய சந்தர்ப்பத்தில் அப்பகுதிமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு,

பின்னர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காரைநகர் மணற்காடு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்றைய தினம் கோவளப்பகுதி மக்களின் 

திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு