யாழ்.மாவட்டத்தில் மட்டும் சுமார் 1814 கர்ப்பவதி பெண்கள் உரிய போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மட்டும் சுமார் 1814 கர்ப்பவதி பெண்கள் உரிய போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர்காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோபாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்களும், பாருத்தித்துறைப் பிரதேச செயலக பிரிவில் 226 கர்ப்பிணிப் பெண்களும் ,சங்கானைப் பிரதேச செயலகபிரிவில் 157 கர்ப்பிணிகளும், 

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் 128 கர்பிணிகளும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 118 கர்ப்பிணிகளும் 

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 117 கர்ப்பிணிகளும். மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 98 கர்பிணிகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லுார் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும், 

காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 40 கர்ப்பிணிகளும், வேலணை பிரதேச செயலக பிரிவில் 49 கர்பிணிகளும் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 25 கர்பிணிகளும்,

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகளும் ஆக 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரம் அரசாங்கத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 2ஆயிரம் ரூபா கொடுப்பனவு 

8 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு