யாழ்.மாநகரில் கேட்பாரற்ற நிலை! பொறுப்புவாய்ந்தோர் மௌனம், வர்த்தகர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் கேட்பாரற்ற நிலை! பொறுப்புவாய்ந்தோர் மௌனம், வர்த்தகர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு..

யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசெளரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்க்கும் பெண்கள் தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

யாழ்.நகருக்கு தினசரி பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசரி அதகரித்து வருவதாக வர்த்தகர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

குறிப்பாக இவ்வாறான நபர்கள் பொதுமக்களை அவதுாறாக பேசுவதுடன், வெளிநாட்டிலிருந்து வரும் புலம்பெயர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடலில் தொடுவது, அவர்களை அவதுாறாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். 

இந்த விடயம் யாழ்.மாநகரசபை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த சகலருக்கும் தொிந்திருந்தும், தொியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. 

இவ்வாறான நடவடிக்கைகளினால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் சித்திரை புத்தாண்டு காலம் நெருங்குவதால் தற்போதுள்ள இந்த மோசமான நிலமை மேலும் தீவிரமடையவுள்ளது. 

னவே பொறுப்புவாய்ந்தவர்கள் சித்திரைப் புத்தாண்டு காலத்திற்கு முன்னர் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு