யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற இரு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்.நகர பகுதியில் உள்ள காட்வெயர் விற்பனை நிலையம் ஒன்றினை உடைத்து ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியமை 

மற்றும் நாவாந்துறை பகுதி ஒன்றில் வீடு உடைத்து பொருட்கள் திருடியகுற்றச்சாட்டில் பொம்மை வெளியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 

திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் 

பின் நீதிமன்றத்தில் முற்படுத்துவதுக்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு