யாழ்.நாகர் கோவிலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி ரவுடிகள் அட்டகாசம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாகர் கோவிலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி ரவுடிகள் அட்டகாசம்!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றது. 

இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. 

அத்துடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.எனினும் இந்த வன்முறை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. 

சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு