க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தவணை மதிப்பீட்டு பரீட்சை 15ம் திகதி இடம்பெறாது! ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக..

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தவணை மதிப்பீட்டு பரீட்சை 15ம் திகதி இடம்பெறாது! ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக..

ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்படவுள்ள பணிப் புறக்கணிப்ப போராட்டம் காரணமாக தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலையத்தினால் நேற்று தொடக்கம் ஆரம்பமான உயர்தர மாணவர்களுக்கான தவணை மதிப்பீட்டு பரீட்சை 15ம் திகதி இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் கல்வி பயிலும் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான தவணை மதிப்பீட்டுப் பரீட்சைகள் நேற்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிரிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதனால் 

அன்றைய தினம் பரீட்சைகளைப் பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகள் 16 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் வகையிலும், 

அதனைத் தொடர்ந்து ஏனைய பரீட்சைகளைத் தொடர்ச்சியாக நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ள தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலையத்தினர் புதிய பரீட்சை நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு