யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது, வாள்கள், திருட்டு மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்க தகடுகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது, வாள்கள், திருட்டு மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்க தகடுகள் மீட்பு..

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைதான நபர்களிடமிருந்து 2 வாள்கள் மற்றும் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர்கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது.

இதுதொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் 

நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ.மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.

சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 

24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு