யாழ்.அச்சுவேலியிலிருந்து 3 மாடுகளை கடத்திவந்த இருவர் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியிலிருந்து 3 மாடுகளை கடத்திவந்த இருவர் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது!

யாழ்.அச்சுவேலியிலிருந்து கடத்திவரப்பட்ட 3 மாடுகள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாவட்டத்தில் தொடர்ச்சியாக வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. நேற்றுமுன்தினமும் பலாலி பகுதியில் மாடுகளை திருடி வாகனத்தில் எடுத்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இவ்வாறான நிலையில் அச்சுவேலியிலிருந்து எந்தவொரு அனுமதியும் பெறாமல் கடத்திவரப்பட்ட 3 மாடுகளை மீட்டுள்ள பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி கிழக்கை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு