யாழ்.காங்கேசன்துறை - வீமன்காமம் மற்றும் அந்தனிபுரம் பகுதிகளில் வெடிபொருட்கள்!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை - வீமன்காமம் மற்றும் அந்தனிபுரம் பகுதிகளில் வெடிபொருட்கள்!

யாழ்.காங்கேசன்துறை - வீமன்காமம் மற்றும் அந்தனிபுரம் பகுதிகளில் நேற்றைய தினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

வீமன்காமம் பகுதியில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கண்ணிவெடி தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதைந்த நிலையில் இருந்துள்ளது.

அதேபோல் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்ரனிபுரம் பகுதியில் கடலில் கரையொதுங்கிய நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

காங்கேசன்துறை பொலிசார் இது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், நீதிமன்றத்தின் நடவடிக்கையின் பின்னர் அந்த வெடிபொருட்களை மீட்டு செயலிழக்க செய்யவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு