யாழ்.மாவட்டத்தில் 13 ஆயிரத்து 888 பேர் போதிய உணவில்லாமல் வாடுகின்றனர்! மாவட்டச் செயலகம் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 13 ஆயிரத்து 888 பேர் போதிய உணவில்லாமல் வாடுகின்றனர்! மாவட்டச் செயலகம் தகவல்..

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு உற்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888 பேர் இருப்பதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் போதிய உணவில்லாமல் இருப்போர் பட்டியலில் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் 2 ஆயிரத்து 966 பேருடன் முதலிடத்தையும் இரண்டாவது இடத்தை 2ஆயிரத்து 618 பேருடன் பருத்தித்துறை பிரதேச செயலகமும் , 

மூன்றாவது இடத்தில் சங்காணை பிரதேச செயலகம் 2 ஆயிரத்து 245 பேரும் உள்ளன. உடுவில் பிரதேச செயலகம் 1800 பேர், நெடுந்தீவு பிரதேச செயலகம் 932 பேர், மருதங்கேணி பிரதேச செயலகம் 705 பேர், 

வேலணைப் பிரதேச செயலகம் 682 பேர், கோப்பாய் பிரதேச செயலகம் 564 பேர், கரகரவெட்டி பிரதேச செயலகம் 377 பேர். யாழ்.பிரதேச செயலகம் 124 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகம் 120 பேர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 108 பேரும், 

கரைநகர் பிரதேச செயலகத்தில் 38 பேரும் காணப்படுகின்றனர்.யாழ் மாவட்டத்தில் மந்த போசாக்குள்ளவர்களாக 8 ஆயிரத்து 112 பேர் காணப்படுவதுடன் அவர்களில் 5 வயதுக்குட்பட்டு 3 ஆயிரத்து 796 பேரும், 

5 தொடக்கம் 9 வயது வரை 2ஆயிரத்து 969 பேரும் 10 தொடக்கம் 17 வயது வரை 2 ஆயிரத்து 347 பேரும் உள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு