யாழ்.கைதடி எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல்! வெட்டுவோம் என மிரட்டிய ரவுடிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல்! வெட்டுவோம் என மிரட்டிய ரவுடிகள்..

திருத்த வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். 


குறித்த சம்பவம் கைதடி பொன்னம்பலம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் இன்றிரவு 9.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. 

நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது போன்றதொரு சம்பவம் தங்களுக்கும் இடம்பெறும் எனவும் அவர்கள் இதன்போது பிரட்டல் விடுத்ததாக எரிபொருள் நிலைய முகாமையாளர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு