யாழ்.நாச்சிமார் கோவிலடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உடுவில் லவ்லேனில் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாச்சிமார் கோவிலடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உடுவில் லவ்லேனில் மீட்பு!

யாழ்.நாச்சிமார் கோவிலடி பகுதிலிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உடுவில் பகுதியில் மீட்க்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் ஒருவர் நாச்சிமார் கோவிலடி பகுதியில் 

தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றிருந்த நிலையில் அது திருடிச் செல்லப்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவம தொடர்பான யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் சுன்னாகம் பொலிசாரினால் உடுவில் லவ்வர்ஸ் ஒழுங்கை பகுதியில் இலக்கத் தகடற்ற நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. 

நேற்றிரவு இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளை ஒருவர் செலுத்து செல்வதை அவதானித்த சுன்னாக பொலிசார். 

அவரை பின்தொடர்ந்து சென்றபோது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பொலிசார் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றநிலையில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று காலை தனது சைக்கிளை அடையாளம் காட்டினார். 

இதனடிப்படையில் மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு