யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு! திருடர்களை நெருங்கிவிட்டோம் என்கிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு! திருடர்களை நெருங்கிவிட்டோம் என்கிறது பொலிஸ்..

யாழ்.மாவட்டத்தில் இரண்டு மணிநேர இடைவெளியில் 4 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. 

நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கும் நேற்று அதிகாலை ஒருமணிக்கும் இடையிலேயே அவைகள் வாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலுக்கு அருகிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரது வெள்ளைநிற மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே அதனை திருடிச் சென்றுள்ளனர். சி.சி.ரி.வி. கமராவில் அது தெளிவாகப் பதிவாகியுள்ளது. 

திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்க மும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திருடிச் சென்ற நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவோமென பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை  சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் ஆகிய பிரதேசங்களிலும் 

மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. ஒரு குழுவே இந்தக் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தி, 

திருடர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு