யாழ்.சாவகச்சோியில் வீடு உடைத்துக் கொள்ளை! இணுவிலில் பதுங்கியிருந்த 3 பேர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் வீடு உடைத்துக் கொள்ளை! இணுவிலில் பதுங்கியிருந்த 3 பேர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்பு..

யாழ்.சாவகச்சோி - கெருடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் யாழ்.இணுவில் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார் இணுவில் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த மூவரை கைது செய்துள்ளதோடு களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர்.

கைதானவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு