யாழ்ப்பாணத்திலும் மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலும் மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டது!

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியிலும் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 மாடுகள் உயிரிழந்திருப்பதுடன், 15 மாடுகளுக்கு தற்போது தொற்று இனங்காணப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் குறித்த மாட்டுப் பட்டியில் 8 மாடுகள் இறந்துள்ளதாகவும், 

அதனை கட்டுப்படுத்துவதற்க்கு உதவு மாறும் பண்ணையாளர்கள் கோரி வருகின்றனர். குறித்த பட்டியில் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சையினை 

இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளரும் மருதங்கேணி கால்நடை வைத்தியருமான் எஸ்.சுகிர்தன் சிகிச்சையளித்து வருகின்றார் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு