யாழ்.வலி,வடக்கில் முன்பள்ளி கட்டிடத்தில் மத செயற்பாடுகளுக்கு முஸ்தீபு! பிரதேச செயலக தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது...

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கில் முன்பள்ளி கட்டிடத்தில் மத செயற்பாடுகளுக்கு முஸ்தீபு! பிரதேச செயலக தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது...

யாழ்.வலி, வடக்கு மீள்குடியேற்ற கிராமமான நல்லிணக்க புரத்தில் உள்ள பாலர் பாடசாலையில் ஒன்றில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் மதச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் பிரதேச செயலக தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  வலி வடக்கு மீள்குடிய கிராமமான நல்லிணக்கபுரத்தில் இராணுவத்தினரால் முன்பள்ளி மாணவர்களுக்கான கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு முன்பள்ளிச் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில், 

இந்நிலையில் குறித்த முன்பள்ளியை பயன்படுத்தி மதக் குழு ஒன்று தமது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக அந்த முன் பள்ளியில் மாணவர்கள் குறைவு என காரணம் காட்டி தமது செயற்பாடுகளை குறித்த முன் பள்ளிக்குள் நடத்த ஆரம்பித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவசிறி ஆகியோரின் கவனத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் சிலரினால் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பலர் பாடசாலையை 

தொடர்ந்து செயல்படுத்துவதற்காக மத செயற்பாட்டுக் குழுவினரை குறித்த முன்பள்ளியின் இருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு