தொலைபேசி மூலம் பேசி பணம் மோசடி! பண்டாரரகம - அட்டுளுகம பகுதியை சேர்ந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது..

ஆசிரியர் - Editor I
தொலைபேசி மூலம் பேசி பணம் மோசடி! பண்டாரரகம - அட்டுளுகம பகுதியை சேர்ந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது..

தொலைபேசி மூலம் பேசி பொதுமக்களிடம் பல லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துவந்த பண்டாரகம - அட்டுளுகம பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு அதிஸ்ர கார் ஒன்று கிடைத்துள்ளதாக Ez Case மூலம் 24 லட்சம் ரூபா மோசடி செய்து கையடக்க தொலைபேசி மூலம் உரையாடி பெற்றமை, தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் படி விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

இப்படியாக பெரிய மற்றும் சிறிய தொகைகளில் ஏராளமானவர்கள் வடபகுதியில் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரியவருகிறது. இவ்வாறான மோசடிக் கும்பலிடம் அகப்பட்டு ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறும், அவ்வாறான தொடர்புகள் கிடைக்கும்போது சாதுரியமாக செயற்பட்டு 

உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிப்பது இவ்வாறான குற்றச் செயல்களில் மேலும் ஈடுபடுபவர்களை இனம்காண உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு