ஆசிரியரின் கையைப் பிடித்து இழுத்த அதிபர்… யாழில் அதிர்ச்சி…

ஆசிரியர் - Admin
ஆசிரியரின் கையைப் பிடித்து இழுத்த அதிபர்… யாழில் அதிர்ச்சி…

காரைநகர் பாடசாலை ஒன்றில் பதில் கடமை புரியும் அதிபர் ஒருவர், பாடசாலை ஆசிரியையின் கையைப் பிடித்து எல்லை மீறிய அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கையைப் பிடித்து இழுத்ததும் அல்லாமல், அவரைத் துரத்தியும் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் ஆசிரியையால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரிலுள்ள இந்த பாடசாலையின் அதிபர் அண்மையில் ஓய்வுபெற்று சென்றுவிட்டார். மூப்பின் அடிப்படையில் அங்குள்ள ஆசிரியர் ஒருவரே பதில் அதிபராக கடமையாற்றி வருகிறார்.

பதில் அதிபருக்கும் அங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கும்டையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பதில் அதிபர், அந்த பெண் ஆசிரியையின் கையைப் பிடித்து இழுத்து வந்து பாடசாலை வாசல் கதவின் வெளியே விட்டுள்ளார். ஒருமையிலும் பெண் ஆசிரியையை திட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு