யாழ்.கோண்டாவிலில் பொலிஸாருக்கு நெருக்கமான நபர் போதை மாத்திரைகளுடன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் பொலிஸாருக்கு நெருக்கமான நபர் போதை மாத்திரைகளுடன் கைது!

போதை மாத்திரை விற்பனையில் ஈடுப்டிருந்த யாழ்.கோண்டாவிலை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பை பேணி வரும் ஒருவரின் உறவினரே இவ்வாறு போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதவேளை, 4 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபரே நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு