வேப்பம் மரத்தின் கிளைகளை வெட்டியபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இளைஞன் 18 வயதான இளைஞன் பலி! யாழ்.தெல்லிப்பழையில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
வேப்பம் மரத்தின் கிளைகளை வெட்டியபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இளைஞன் 18 வயதான இளைஞன் பலி! யாழ்.தெல்லிப்பழையில் சம்பவம்...

யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று (05) மாலை உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு