யாழில் மாங்காயால் இரு முதியவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு

ஆசிரியர் - Admin
யாழில் மாங்காயால் இரு முதியவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் உயிரிழப்பு

மாமரத்திலிருந்து விழுந்தவர் படுகாயமடைந்த நிலையில் அவரை முச்சக்கர வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற முதியவர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ். அரியாலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த முதியவர் இன்னொரு முதியவரை அழைத்து அவரைத் தனது வீட்டு மாமரத்தில் ஏற்றி மாங்காய் பறித்துள்ளார். மரத்தில் ஏறியவர் தவறுதலாகக் கீழே விழுந்துள்ளார்.மரத்தால் விழுந்தவரை உடனடியாக முச்சக்கர வண்டியில் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையை அண்மித்த போது படுகாயமடைந்தவரும், அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவரும் மயக்கமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டிச் சாரதி குறித்த இருவரையும் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ள நிலையில் மாமரத்தால் விழுந்தவரை வைத்தியசாலையில் சேர்ப்பிக்க வந்த முதியவர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் யாழ். அரியாலையைச் சேர்ந்த பொன்னுத்துரை சிங்கராசா(வயது- 78) என்ற முதியவரே உயிரிழந்தவராவார்.

இதேவேளை, மாமரத்திலிருந்து விழுந்த முதியவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு