இலங்கை கடலில் தொழில் செய்ய இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவதை எதிர்த்து பாரிய போராட்டம்! ஒழுங்கமைப்பு கூட்டத்தில் நா.உறுப்பினர்கள் பங்கேற்பு...

ஆசிரியர் - Editor I
இலங்கை கடலில் தொழில் செய்ய இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவதை எதிர்த்து பாரிய போராட்டம்! ஒழுங்கமைப்பு கூட்டத்தில் நா.உறுப்பினர்கள் பங்கேற்பு...

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அங்கீகரம் கொடுக்க முயற்சிக்கப்படுவதற்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தவுள்ளதாக வடமாகாண மீனவசங்க பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் குறித்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளுடான கலந்துரையாடல் ஒன்று யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தலைமையில் 

யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதன்போது வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடினர்.

மேலும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதற்கும் தீர்மானித்தனர். 

போராட்டம் நடைபெறவுள்ள திகதி தொடர்பில் மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதன் போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் 

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தபோதும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி 

மற்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு