யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றவர்களாலேயே ஊரெழு பெண் கொழும்பில் கழுத்தறுத்து கொலை!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றவர்களாலேயே ஊரெழு பெண் கொழும்பில் கழுத்தறுத்து கொலை!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களே இந்த கொலையினை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- ஊரெழுவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கணவனைப் பிரிந்து வாழும் நிலையில், கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக இருந்துள்ளார்.

அந்த பெண் வேலை செய்யும் வீட்டில் வைத்தே நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டே குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ இந்த கொலையை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கோப்பாய் மற்றும் கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு