யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சபம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சபம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்..

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபம் நேற்று மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. 

இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது. 

இம்முறை வருடாந்த கச்சை தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை ,இந்திய துணைதூதவராலயம், 

இலங்கையின வெளிவிவகார ஆமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு உற்சவம் சிறபாக ஆரம்பமாகியுள்ளது.

ன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் யாழ்.மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கபடவுள்ளது.


இதன் பொழுது 60 நாட்டுபடகுகளிலிருந்தும் 16 இழுவை மடி படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும் 

இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4900 பேரும், 

அதிகாரிகள், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5100பேர் கச்சை தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு