யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு இணை அனுசரணை வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனமான மலிபன்…

ஆசிரியர் - Editor I

இலங்கையின் முன்னணி பிஸ்கட் உற்பத்தி நிறுவனமான மலிபன், 2023 யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

 யாழ் குடாநாட்டில் நடைபெறும் மிகப் பெரிய வர்த்தகக் கண்காட்சியான யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது 13ஆவது தடவையாக மார்ச் 03, 04 மற்றும் 05ஆம் திகதிகளில் முற்றவெளி விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த இலங்கை மக்களின் போஷாக்கிற்காகவும் எதிர்கால நலனுக்காகவும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் மலிபன் நிறுவனம் யாழ்.மாவட்ட மக்களுக்கு புதிய வாய்ப்புகளை திறந்து வைக்கும் இக்கண்காட்சியில் இணைந்து கொள்கிறது. 

இந்த கண்காட்சியில் யாழ் மக்கள் மலிபன் தயாரிப்புகளை சுவைத்து மகிழலாம்.

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியானது பல தசாப்த கால யுத்தத்தின் பின்னரான மாற்றத்தில் யாழ் குடாநாட்டை உலகிற்கு திறந்து வைப்பதில் முன்னணிப் பங்காற்றியதுடன், 

அந்தப் பிரதேச மக்களுக்கும் தொழில்முனைவோருக்கும் புதிய நம்பிக்கையையும் பலத்தையும் வழங்குவதில் வெற்றிபெற்றது

மலிபன் நிறுவனம் இந்த கண்காட்சி மைதானத்தில் கவர்ச்சிகரமான அரங்குகளை உருவாக்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளிக்கவுள்ளது. இங்கு அவர்கள் மலிபன் தயாரிப்புக்களை கவர்ச்சிகரமான தள்ளுபடிகளுடன் கொள்வனவு செய்ய முடியும்.

 பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் பெறுமதியான பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பும் உங்களுக்கு இங்கு காத்திருப்பதுடன், இந்த அற்புதமான அனுபவத்தைப் பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு