மனைவி மற்றும் மாமியார் மீது கோடரியால் கொடூர தாக்குதல்! மாமியார் பலி, மனைவி ஆபத்தான நிலையில்....

ஆசிரியர் - Editor I
மனைவி மற்றும் மாமியார் மீது கோடரியால் கொடூர தாக்குதல்! மாமியார் பலி, மனைவி ஆபத்தான நிலையில்....

கணவன் மனைவி சண்டையை தீர்க்க சென்ற மனைவியின் தாய் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் வவுனியா - உலுக்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. இன்று (02) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,இன்று வியாழக்கிழமை காலை கணவனிற்கும், மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. 

அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடாரி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவிமீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.இதனை தடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 

இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெரியஉலுக்குளம் பகுதியை சேர்ந்த டிபி அமராவதி (வயது60), என்ற பெண் பலியானதுடன் அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு