யாழ்.நல்லுார் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 4வது நபர் கைது! வாள் மீட்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 4வது நபர் கைது! வாள் மீட்பு...

யாழ்.நல்லுார் வீதியில் சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதான நபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கடந்த 18ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தன்று அதிகாலை வேளை நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், 

நேற்று (மார்ச் 1) புதன்கிழமை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூன்று பேர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு