யாழ்.கோப்பாய் விபத்தில் நீர்வேலி இளைஞன் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் விபத்தில் நீர்வேலி இளைஞன் உயிரிழப்பு!

யாழ்.கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந் த 23 வயதான இளைஞன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். 

கடந்த 23ம் திகதி கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால் கார் மீது மோதி விபத்து இடம்பெற்றது. 

சம்பவத்தில் நீர்வேலியை சேர்ந்த இ.பாவிதான் (வயது23) என்ற இளைஞன் மயக்கமடைந்த நிலையில் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 28ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவ்விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு