அராலி வள்ளியம்மை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீட்டு காணியில் மோட்டார் குண்டு..

ஆசிரியர் - Editor I
அராலி வள்ளியம்மை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீட்டு காணியில் மோட்டார் குண்டு..

யாழ்.வட்டுக்கோட்டை - அராலி வள்ளியம்மை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீட்டு காணி ஒன்றில் துருப்பிடித்த நிலையிலான மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த வீட்டு காணியில் சில வருடங்களுக்கு முன்னர் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை ஜே/160 கிராம சேவகர் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளரால் குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு