யாழ்.தீவகம் மண்டைதீவு- அல்லைப்பிட்டி இடையில் புதிய பாலம் திறந்துவைப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகம் மண்டைதீவு- அல்லைப்பிட்டி இடையில் புதிய பாலம் திறந்துவைப்பு..

வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட மண்டைதீவு- அல்லைப்பிட்டி இடையிலான பாலம் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஷ்வரனால் இன்று திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. 

ஆயிரம் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 32 மில்லியன் ரூபா செலவில் இப் பாலம் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது.

இப் பாலம் திறப்பு விழா இன்று நடைபெற்றபோது  முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக்க் கலந்து கொண்டு பாலத்தை நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன் பெயர்ப் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்து விசேட உரையொன்றையும் ஆற்றியிருந்தார்.

இந் நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்னம், பா. கஜதீபன், ஆர்.ஜெயசேகரம் மற்றும் மாகாண பிரதம செயலாளர் 

பத்திநாதன் மதகுருமார்கள், பொதுமக்கள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு