யாழ்.மாவட்டத்தில் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்!

யாழ்.மாவட்டத்தில் வனவள திணைக்களத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. 

ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கும் - யாழ்.மாவட்டச் செயலர் உள்ளிட்ட மாவட்டச் செயலக அதிகாரிகளுக்குமிடையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கின்றது. 

இக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வடக்குமான பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளி, மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வனவள திணைக்கள அதிகாரிகள், 

பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இணையவழியூடாக கொழும்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

வனவள தினைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகள் தொடர்பில் இன்று களவிஜயம் ஒன்றும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு